×

(தி.மலை) போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு போளூர் அரசினர் பெண்கள் பள்ளியில்

போளூர், மார்ச் 3: போளூர் அரசினர் பெண்கள் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு மையம், ஓவியம், பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை பா.தாமரைசெல்வி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் பா.ஜெயவேலு கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

இதில் தேர்தல் துணை தாசில்தார் ஆர்.மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் சு.பிரேம்நாத், விஏஓ எம்.மயிலரசன், வருவாய்த்துறை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போளூர் அரசினர் பெண்கள் பள்ளியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தாசில்தார் பா.ஜெயவேலு பரிசு வழங்கினார்.

Tags : Polur Government Girls School ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...