செங்கோட்டை, மார்ச் 2: செங்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. செங்கோட்டை வாகைமரத்திடலில் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வரவேற்றார். மீனவரணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி, நகர அவைத்தலைவர் தங்கவேலு, துணைச் செயலாளர் பூசைராஜ், பொருளாளர் ராஜா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் இந்திரா, மாணவர் அணி செயலாளர் முத்துராமன், வார்டு செயலாளர்கள் கோவிந்தன், அய்யப்பன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், அரிகரன், கனியத்தா, சீனிவாசன், நவநீதகிருஷ்ணன், கணேசன், செண்பகம், சேது, முகைதீன்சாகீபு, லட்சுமணன், திலகர், பக்கீர்அண்ணாவி முன்னிலை வகித்தனர். பேச்சாளர் வடுகப்பட்டி சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர்உசேன், சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் ஞானராஜ், மாவட்டப் பிரதிநிதி முகைதீன்பிச்சை, எம்ஜிஆர் மன்ற நகர துணைச் செயலாளர் மாசானம், ஜெ. பேரவை துணை செயலாளர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லிங்கராஜ் நன்றி கூறினார்.