×

பணம் பறித்த வழக்கில் வாலிபர் கைது

ஈரோடு, மார்ச் 1:   பணம் பறித்த வழக்கில் இரு மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  ஈரோடு பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் மாணிக்கம் (25). ஈரோடு வைராபாளையம் பழைய காலிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோடு அன்னை சத்யா நகர் ஏ.பி.டி ரோட்டை சேர்ந்த சிவராமன் மகன் கார்த்தி (27) மற்றும் ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதி செல்வராஜ் மகன் மணிகண்டன் (22) ஆகியோர் மாணிக்கத்திடம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால், மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ரூ.650 பணத்தை பறித்து சென்றனர்.  இது குறித்து மாணிக்கம் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கார்த்தியை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags : Plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது