×

விளைநிலங்களுக்கு செல்ல ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தல்

தேவதானப்பட்டி, பிப். 26: தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்து விவசாயிகள், விளைநிலங்களுக்கு செல்ல, பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டிக்கு வடக்கே உள்ள முருகமலையில் இருந்து, தர்மலிங்கபுரம், சில்வார்பட்டி வழியாக ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு பெரிய ஓடை செல்கிறது. இந்த ஓடை சில்வார்பட்டியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. சில்வார்பட்டி விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்கள், ஓடையை கடந்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.

இந்நிலையில், நிலத்தடி நீரை உயர்த்த ஓடையின் குறுக்கே ஆங்காங்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழை காலங்களில் ஓடையில் வெள்ளம் வரும்போதும், தடுப்பணைகள் நிரம்பும் போதும் ஓடையில் மழை நீர் தேங்கி நிற்கும். இதனால் சில்வார்பட்டி விவசாயிகளுக்கு விளை நிலங்களுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வதும், விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்வதும், விளைந்த பொருட்களை கொண்டு வருவதற்கும், விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, சில்வார்பட்டி கிழக்கே உள்ள பெரிய ஓடையின் குறுக்கே பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,stream ,farms ,
× RELATED அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்...