கொடைக்கானல், பிப். 19: கொடைக்கானல் நகராட்சி நகரமைப்பு அலுவலராக முருகானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தற்போது நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக இருந்த நாசர் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டார். இவர் நேற்று கொடைக்கானல் நகராட்சியின் புதிய நகரமைப்பு அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.