×

வீரகனூர் பஸ் நிலையம் அருகே பழுதான தெருவிளக்கை சீர்செய்ய வலியுறுத்தல்

கெங்கவல்லி,  பிப்.18: வீரகனூர் பஸ் நிலையம் அருகே, பொதுத்துறை வங்கி ஏடிஎம் மையம் முன்பு, தெரு விளக்கு பழுதடைந்துள்ளதால், இரவில் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். வீரகனூர் பஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  முன்புறம் தெருவிளக்கு உள்ளது. இது கடந்த 2 மாதமாக எரியவில்லை.  இதனால் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வருபவர்கள்  அச்சமடைகின்றனர். மேலும், இரவில் வெளிச்சம் இல்லாததால், வங்கியின் சிசிடிவி  கேமராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் சரிவர பதிவு ஆவதில் சிக்கல்  ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள வங்கி  ஏடிஎம்மில் காவலாளியை கொலை செய்து விட்டு கொலை முயற்சி நடைபெற்றது  குறிப்பிடத்தக்கது. ஆகவே, அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த மின்விளக்கை  சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station ,Veeraganur ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்