×

நெல் அறுவடை பணி ஜெயமங்கலத்தில் துவக்கம்

தேவதானப்பட்டி, பிப். 7: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பகுதியில் நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மஞ்சளாறு அணை பாசனம் மூலம் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, உள்ளிட்ட இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மஞ்சளாறு அணை பாசனம் மூலம் தாமதமாக நெல் சாகுபடி செய்துள்ளதால் தற்போது நெல் இளம் பருவத்தில் உள்ளது. ஆனால் மேல்மங்கலம், ஜெயமங்கலம், பகுதியில் தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் இந்த பகுதியில் நெல் அறுவடை பணி கடந்த இரண்டு நாட்களாக துவங்கியுள்ளது.

Tags : Jayamangalam ,
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை