×

பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவர் கைது

ஈரோடு, பிப்.6:  ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் நாட்ராயன் (45). சிசிடிவி கேமரா கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாதேவி (40). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதமாக உமாதேவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் உமாதேவி அவரது கணவர் வீட்டில் இருந்த இரு மகன்களை பார்ப்பதற்காக வந்தார். அப்போது, நீ என் வீட்டிற்கு வந்து மகன்களை பார்த்து விட்டு செல்வதால் என்னால் 2வது திருமணம் செய்ய முடியவில்லை என கூறி, தகாத வார்த்தயைால் பேசி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஆத்திரம் அடைந்த நாட்ராயன் அவரது மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் உமாதேவி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நாட்ராயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags : school teacher ,
× RELATED அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்