×

அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், ஜன.5: அரியலூர், திருமானூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைதல் வேண்டும். ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருள்ஜோதி தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவபாக்கியம், வட்டாரப் பொருளாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றி முழக்கமிட்டனர். இதே போல் திருமானூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் தாமஸ் ரூபன் ஆகியோர் தலைமை வகித்தார்.

The post அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Primary ,School Teacher Coalition ,Ariyalur, Thirumanur ,Ariyalur ,Tamil Nadu Primary School Teachers' Coalition ,Thirumanur ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா