×

நெல்லை அருகே பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் அவதி

நெல்லை, பிப். 4: நாங்கு நேரியில் பிஎஸ்என்எல்  தொலைத் தொடர்பு சேவை கிடைக்காததால் வாடிக்கையாளர் அவதிக்குள்ளாகின்றனர். நாங்குநேரி பகுதியில் நாங்குநேரி பரப்பாடி, பாணான்குளம், மருதகுளம் களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ் என்எல் தொலைத்தொடர்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நாங்குநேரி வட்டாரத்தில்  பிஎஸ்என்எல் சேவை பாதிப்பால்  வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.  பல கிராமங்களில் சேவை முற்றிலும் தடை பட்டுள்ளது.  இதனால் அவசரத்தேவைகளுக்கு கூட பிற செல்போனுக்கு தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.  

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று பணியில் இருந்து விலகி விட்டதால் போதிய பணியாளர்கள் இன்றி வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர். எனவே சேவை குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய பிஎஸ்என்எல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாடிக்கையாளர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Customers ,BSNL ,paddy ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...