×

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருக்கோவிலூர், ஜன. 31:  திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். கடந்த 1986 வருடம் முதல் 1993 வருடம் வரை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு இதுவரை வாழ்க்கையில் பயணித்த அனுபவங்கள், தங்களுக்கு கற்பித்த ஒய்வுபெற்ற ஆசிரியர்களிடம் கலந்துரையாடினர். மேலும் பள்ளிக்கு தேவையான மைக், ஒளிப்பெருக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை முன்னாள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் ஓப்படைத்தனர். இதில் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் பாலு, பதி. பாண்டியன், மாணிக்கம், தினகரன், சீனுவாசன், மாணவர்கள் கிருஷ்ணா பேப்பர் ஸ்டோர் ராதா, சம்பத்குமார், பெட்ரிக், நவின் தமிழ், அசோக், குமரேசன், குரு, தினகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Government School Alumni ,
× RELATED காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு