×

நந்தகோபால்சாமி நகர் மக்கள் அடிப்படை வசதி கோரி கம்பம் ஆணையரிடம் மனு

கம்பம், ஜன. 30: கம்பம் நந்தகோபால்சாமி நகர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். கம்பம் நந்தகோபால் சாமி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, கழிவுநீர் சாக்கடை கால்வாய், சாலை வசதி செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்துள்ளனர்.

அதன்பேரில் கடந்த ஆண்டு நகரின் பிராதன சாலை மட்டும் போடப்பட்டது. மீதியுள்ள பகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படாததால் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியில் போதிய அடிப்படை வசதியினை செய்து தரக்கோரி நேற்று நந்தகோபால்சாமி நகர்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். அங்கு நகராட்சி ஆணையர் கமலாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை பெற்ற நகராட்சி ஆணையர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததார்.

Tags : Nandakopalsamy City ,polling commissioner ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு