×

தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

திருக்கோவிலூர், ஜன. 22: திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகள் சரஸ்வதி(22). இவருக்கும் வடியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த  கார்த்திகேயன்(29) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு பத்து மாத ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு   சொந்த ஊரான வடியாங்குப்பம் கிராமத்திற்கு இருவரும் வந்துள்ளனர்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நாள் என்பதால் சரஸ்வதி தனது தாய் வீட்டிற்கு கணவரை அழைத்துள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சரஸ்வதி வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போன்மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த  தந்தை சின்னசாமி தனது மகள் உடலில் காயங்கள் உள்ளதால் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், இதற்கு காரணமான கார்த்திகேயன், மாமியார் மகாலட்சுமி,  உறவினர்கள் காந்தி, கஸ்தூரி, செல்வகுமார் ஆகியோர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். பத்து மாத குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை