×

57 வது நினைவு தினம் ஜீவா சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பு

நாகர்கோவில், ஜன.19: ஜீவானந்தத்தின் 57 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாகர்கோவில் பூங்காவில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், வசந்தகுமார் எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், நாகர்கோவில் ஆர்டிஒ மயில்,  ஜீவானந்தம் பேரன் ஜீவா கணேசன் ஆகியோர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நாகர்கோவில் மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவுது, எம்.ஜே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது மாலை அணிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகம்மது உசைன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, நகர செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : celebration ,Jiva ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்