×

கடையம் அருகே பாப்பான்குளத்தில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்

கடையம், ஜன.13: கடையம் அருகே பாப்பான்குளத்தில் தடுப்பு சுவர் இல்லாத கால்வாய் பாலத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது. கடையம் யூனியனுக்கு உட்பட்டது பாப்பான்குளம் ஊராட்சி. பாப்பான்குளத்திலிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் வழியில் கால்வாய் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் இருந்த சிமென்ட் தடுப்பு சுவர்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த வழியை பாப்பான்குளம், ஏபி நாடானூர், மைலப்பபுரம், தீர்த்தாரப்பபுரம் உள்பட பல கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆழ்வார்குறிச்சி சென்று படித்து வருகின்றனர். மேலும் மினி பஸ்கள், ஆட்டோ, கார், பள்ளி வேன்கள் இந்த பாலத்தில் செல்லும் போது எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது கால்வாயில் விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்களுக்கு பாலம் இருப்பது தெரியாமல் தவறி விழும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தென்காசி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இந்த கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : barrier bridge ,shop ,Pappankulam ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி