கரூர், ஜன. 10: கரூர் பசுபதீசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி பசுபதீசுவரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.