×

இண்டூர் அருகே மின் மோட்டாரை சீரமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி, ஜன.10: இண்டூர் அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கூடல் பஞ்சாயத்து கூலிக்கொட்டாய் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, சிறுமின் விசை குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் டேங்க், வறட்சி காலங்களில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த குடிநீர் டேங்கின் மின்மோட்டார் பழுதடைந்ததால், கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Indore ,
× RELATED சூதாடிய 11 பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல்