தர்மபுரி, மார்ச் 15: இண்டூர் போலீஸ் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார், நடப்பனஹள்ளி முனியப்பன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சூதாடிய வெங்கடேசன்(39), சண்முகம்(48) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்த ேபாலீசார், அவர்களிடம் இருந்து ₹5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ஏரியூர் எஸ்ஐ ராஜாமணி மற்றும் போலீசார் எம்.தண்டா பகுதியில் ரோந்து சென்ற போது, வீட்டின் அருகே சூதாடிக்கொண்டிருந்த முருகேசன்(46), மோகன்ராஜ்(37), ஜெயகாந்த்(48), ராஜேஸ்குமார்(35) ஆகிய 4பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ₹15 ஆயிரம் மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். அதே போல், மொரப்பூர் எஸ்எஸ்ஐ ஜெயந்தி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, தாசரஅள்ளி சுடுகாட்டில் சூதாடிக்கொண்டு இருந்த பழனிவேல்(34), கிருஷ்ணன்(48), மாதையன்(53), கிருஷ்ணன்(40), சம்பத்குமார்(40) ஆகிய 5பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
The post சூதாடிய 11 பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.