×

மாவட்டம் முழுவதும் வரும் 19ம் தேதி 1.47 லட்சம் குழந்தைகளுக்கு ேபாலியோ சொட்டு மருந்து

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரும் 19ம் தேதி, 1,47,869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 19ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது தொடர்பான, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், ஐந்து வயதிற்குட்பட்ட 1,66,528 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதே போல், வரும் 19ம் தேதி அன்று நடைபெறும் முகாமில் 1,47,869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்கள், நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கபட்பட்டுள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சத்துணைவு, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4083 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில், 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த, 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே மாட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள், தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் வரும் 19ம் தேதி அன்று இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும், போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : children ,districts ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...