×

விபத்தில் நிதிநிறுவன பெண் ஊழியர் பலி

குலசேகரம், ஜன. 9: குலசேகரம்  சங்கரன்விளை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சைனி (30). இவர்  ஊரம்பு  பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.   நேற்றுமுன்தினம் பணி முடித்து விட்டு இரவு தனது ஸ்கூட்டரில் குலசேகரத்துக்கு வந்தார். 9   மணியளவில் ஆற்றூர் மங்களாநடை பகுதியில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த  அடையாளம் தெரியாத வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல்  சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அப்பகுதியில்  உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சைனி பரிதாபமாக இறந்தார். இது  குறித்து திருவட்டார்  போலீசார் வழக்கு பதிவு செய்து சைனி மீது மோதிவிட்டு  நிற்காமல் சென்ற வாகனம் எது என விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...