×

குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட கோரிக்கை

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அருகே சேலம்- பெங்களூரு பைபாஸ் சாலையில் குண்டல்பட்டி சந்திப்பில் அடிக்கடி வாகனங்களால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தர்மபுரியில் இருந்து செல்லும் வாகனங்கள் குண்டல்பட்டி சந்திப்பில் சென்று, பெங்களுரு மார்க்கமாக செல்ல நிரந்தர தடை விதிக்கப்பட்டது. மேலும் சாலையில் தடை கற்கள் வைத்து அடைக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், பழைய தர்மபுரி, சவுளூர் வழியாக பெங்களூரு பைபாஸ் சாலையை அடைந்து செல்கின்றன. இதன் மூலம் குண்டல் பட்டி சந்திப்பில், விபத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முத்துப்பட்டி, கொளகத்தூர், கே.நடுஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டபல்பட்டிக்கு வர, பழைய தர்மபுரி சென்று சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே குண்டல்பட்டி பைபாஸ் சாலையை பாதசாரிகளும், வாகனங்களும் கடந்து செல்ல மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : National Highway ,Kundalpatti ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!