×

கிராம கோயில் பூசாரி பேரவை கூட்டம்

ஆலங்குளம், ஜன. 8: ஆலங்குளத்தில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாடு வரும் 22ம்தேதி பாளையங்கோட்டையில் நடக்கிறது. இதுதொடர்பாக ஆலங்குளம் கருப்பசாமி கோயிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது.    மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட மாநாட்டை சிறப்பாக  நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மண்டல அமைப்பாளர் மாரியப்பன், ஞானக்குட்டி மற்றும் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், கீழப்பாவூர், பாப்பாக்குடி, கடையம், கடைநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஒன்றிய நிர்வாகிகள் பங்ேகற்றனர்.

Tags : Meeting ,village ,temple priest ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது