×

வாலிபர் மீது தாக்குதல்

பாகூர், ஜன. 8: தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் பகலவன் என்கிற வீரப்பன் (40). இவரது வீட்டு முன்பு, அதே பகுதியில் உள்ள சடாநகரை சேர்ந்த சிலம்பரசன் என்பவரும், அவரது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பகலவன் தட்டிக் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலம்பரசன் தனது கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் பகலவனை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிலம்பரசன் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது