×

மணல் கடத்திய 2 பேருக்கு வலை

திருக்கோவிலூர், ஜன. 8: திருக்கோவிலூர் அருகே காக்குப்பம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவசங்கர் (35), கந்தன் மகன் ஆறுமுகம் (30) ஆகிய 2 பேரும் எவ்வித அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை