×

பூதப்பாண்டி அருகே நடந்த காண்ட்ராக்டர் கொலையில் ஒருவர் சிக்கினார்

பூதப்பாண்டி, ஜன.3 : பூதப்பாண்டி அருகே நடந்த காண்ட்ராக்டர் கொலையில் ஒருவர் சிக்கினார். தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞானய்யாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் (45). கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவரது உறவினர் மகளை, இறச்சகுளம் அம்பலந்திருத்தி பகுதியை சேர்ந்த தேவானந்த் (22) என்பவர் காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 25ம்தேதி, தேவானந்த்தை, ஆனந்த் தாக்கினார். இதனால் ஆனந்த் மீது, தேவானந்த் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில், கடந்த 31ம்தேதி  இரவு ஆனந்த் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக இறச்சகுளம் அம்பலந்திருத்திக்கு சென்றனர். அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இவர்கள் நின்று கொண்டு இருந்த போது அங்கு தேவானந்த், தனது நண்பர்கள் பிரவீன், முத்து மற்றும் அருள்குமரன் ஆகியோருடன் வந்து தகராறு செய்தார். இந்த தகராறில் ஆனந்த்தை, கத்தியால் சரமாரியாக குத்தினர். இதை தடுக்க வந்த அருள்தாசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த ஆனந்த், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி, தேவானந்த், பிரவீன், முத்து, அருள்குமரன் ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது வரை கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை மட்டும் தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் வெளியூர் தப்பி சென்றார்களா? அல்லது உள்ளூரில் தலைமறைவாக உள்ளார்களா? என்பது தெரிய வில்லை. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். போலீஸ் தேடும் நபர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Poothapandi ,contractor murder ,
× RELATED பூதப்பாண்டி அருகே பேராசிரியையை...