×

குண்டும், குழியுமான அங்கேரிபாளையம் ரோடு

திருப்பூர்,ஜன.3:திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், தினசரி விபத்துகள் ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் புதிதாக போடப்பட்டுள்ள ரோடுகள் ஓராண்டிற்குள்ளாகவே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி, இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போடப்பட்ட ரோடுகள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை தாக்கு பிடித்தது. ஆனால் தற்போது போடப்பட்ட ரோடுகளோ, போடப்பட்ட குறிப்பிட்ட மூன்று மாதத்திலே குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிறிய பள்ளம், மேடுகளை சரி செய்ய “பேட்ஜ் ஒர்க்’ அவ்வப்போது நடக்கிறது. இவையும் தரமாக இருப்பதில்லை. இந்நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் தினசரி விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

Tags : Anguiripalayam Road ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்