×

அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்

 

உடுமலை, ஏப். 26: அமராவதி அணை உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீர்வளத்துறைக்கு சொந்தமான அமராவதி அணையின் இடதுபுறம் உள்ள ராஜாஜி பூங்காவில் உள்ள 164 தென்னை மரங்கள் 3 ஆண்டு குத்தகைக்கு ஏலம் விடப்பட உள்ளன. முன் வைப்புத் தொகை ரூ.75 ஆயிரம். இதேபோல, அமராவதி அணை சிறுவர் பூங்கா வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை வாடகைக்கு நடத்த 3 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படுகிறது.

முன்வைப்பு தொகை ரூ.25 ஆயிரம். அமராவதி நகர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் மே 2-ம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் நடக்கிறது. டெபாசிட் தொகையை வங்கி வரைவோலையாக எக்சிகியூட்டிவ் இன்ஜினியர், ஏ.பி.டிவிசன், தாராபுரம் என்ற பெயரில் எடுத்து வர வேண்டும். வரைவோலையில் பெயர் உள்ள ஒருவர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம் appeared first on Dinakaran.

Tags : Amaravati Park ,Udumalai ,Assistant Engineer ,Amaravati Dam ,Rajaji Park ,Amaravati ,Dam ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு