×

ஜிப்மரில் செவிலியர் விழா

புதுச்சேரி, ஜன. 3: உலக சுகாதார அமைப்பு, பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு 2020ம் ஆண்டை செவிலியர் மற்றும் தாதியர் ஆண்டாக கொண்டாடுகிறது. இதையொட்டி ஜிப்மர் பதிவு பெற்ற செவிலியர் சங்கம் சார்பில் ஜிப்மர் எஸ்எஸ்பி அனக்ஸ் ஹாலில் விழா நடத்தப்பட்டது. சங்கத்தின் துணை தலைவர் பிரியதர்ஷினி வரவேற்றார். செவிலியர் பொறுப்பு அதிகாரி சாந்தி தமிழ்மணி, சங்கத்தின் தலைவர் மேரி இளங்கோ ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அனைத்து செவிலியர்களும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உறுதிமொழியை வாசித்தனர். அப்போது அவர் செய்த சேவையைத் தொடர்ந்து இக்காலத்திற்கு ஏற்ப மேம்பட்ட முறையில் வழங்குவோம் என உறுதியளித்தனர். தொடர்ந்து வரும் மே மாதத்தில் செவிலியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகி ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொதுசெயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Nurse Ceremony ,Zipmar ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் அரைநாள்...