×

அசோகபுரம் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

பெ.நா.பாளையம், டிச.29:கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் அசோக்குமார் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக இரு சக்கர வாகனம், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மூலம் ஊராட்சி முழுவதும் பேரணியாக சென்றனர். என்.ஜி.ஜி.ஓ. காலனி நால் ரோட்டில் பிரசாரத்தை முடித்து அவர் பேசுகையில், ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்,  இனி வரும் நாட்களில் ஆம்புலன்ஸ் முதல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும், ஊராட்சி முழுவதும் தினமும் குப்பை எடுத்து தூய்மை பகுதியாக மாற்றிடவும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் உதய சூரியன் சின்னத்திலும், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் காந்திமதிக்கு கை சின்னத்திலும் வாக்கு சேகரித்தனர். மாநகராட்சி முன்னாள் மேயர் காலனி வெங்கடாலம், முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன், தலைமை செயற்க்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட அவை தலைவர் கணேச மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாவிமலன், உட்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags : Ashokapuram ,
× RELATED தங்கை திருமணத்திற்கு சென்ற அண்ணன் உட்பட 4 பேர் விபத்தில் பலி