×

விமானம் மூலம் இன்று சேலம் வருகை முதல்வர் சொந்த ஊரில் வாக்களிக்கிறார்

சேலம், டிச.27:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று சேலம் வருகிறார். சேலம் மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இடைப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனது வாக்கை பதிவுசெய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் இடைப்பாடிக்கு செல்கிறார். 12 மணி அளவில் அவரது வாக்கை பதிவு செய்கிறார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை ேசலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வருகிறார். மறுநாள் காலை விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : Chief Minister ,visits ,Salem ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...