×

கிருஷ்ணகிரியில் வியாபாரியிடம் செல்போன் பறிப்பு

கிருஷ்ணகிரி, டிச.27:  கிருஷ்ணகிரி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தினமும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை, தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த காய்கறி வியாபாரி சல்மான் என்பவர், கோஆப்ரேட்டிவ் காலனி 2வது தெருவில், காய்கறி வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் குல்லா, ஸ்ெவட்டர் அணிந்து வந்த 3 பேர், சல்மானின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த சல்மான், இதுபற்றி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : dealer ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்