×

கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்

கிருஷ்ணகிரி, ஏப்.24: கிருஷ்ணகிரி மகராஜகடை அருகேயுள்ள மாட்டோனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(48), விவசாயி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி சரளா நேற்று முன்தினம் மகராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Krishnagiri ,Murugesan ,Matoni ,Maharajakadai, Krishnagiri ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்