×

மணல் கடத்தலுக்கு உடந்தை எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்

விழுப்புரம், டிச. 27:    மணல்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் எஸ்ஐ, ஏட்டு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ஹரிதாஸ், எழுத்தராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், அதனை தடுக்க தவறியதாகவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக எஸ்பி ஜெயக்குமாருக்கு தகவல் சென்றது. விசாரணை நடத்திய எஸ்பி, எஸ்ஐ, ஏட்டு ஆகிய இருவரையும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : SI ,sand smuggler ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது