×

பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் 3 ஆண்டுகளாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

பள்ளிகொண்டா, டிச.17: பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளான கழிப்பிட வசதி, பஸ் வசதி மற்றும் சரியான சாலை வசதிகள் என எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல பஸ்களை பிடிக்க 1 கி.மீ தூரம் வரை செல்ல வேண்டும்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பெண்கள் எவ்வித அச்சமின்றி சென்று வந்தனர். மேலும், இரவு நேரங்களில் உயர் கோபுர மின் விளக்கின் அருகே உள்ள விளையாட்டு திடலில் அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்தனர்.

விளக்கு அமைத்த சில மாதங்களிலேயே சரியாக பராமரிக்காமல் விட்டதால் மின் விளக்குகள் எரியாமல் போனது. இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதி இளைஞர்களும் விளையாடுவதை விட்டு விட்டனர். மின் விளக்கு எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கியபடி இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்சன் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரத்தில் அமைக்கப்பட்டு உயர்கோபுர மின்விளக்கு எரியாத நிலையில் பயனற்று கிடக்கிறது.

Tags : Pallikonda ,Krishnapuram ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...