×

பைக்கில் பெட்ரோல் நிரப்பியபோது தீ விபத்து வாலிபருக்கு தீவிர சிகிச்சை ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், ஏப்.24: ஒடுகத்தூர் அருகே பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(33). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒடுகத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக் பாதி வழியில் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. இதையடுத்து நவீன்குமார் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வங்கி வந்து வாகனத்தில் நிரப்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்பார்க் பிளக்கில் இருந்து தீப்பொறி பரவி பெட்ரோல் கேன் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென நவீன்குமார் உடல் முழுவதும் பரவி பற்றி எரியதொடங்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 90 சதவீத தீ காயத்துடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பைக்கில் பெட்ரோல் நிரப்பியபோது தீ விபத்து வாலிபருக்கு தீவிர சிகிச்சை ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Odukathur ,Odugathur ,Naveen Kumar ,Kotavoor ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...