×

நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது தடுக்க வந்த போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு வேலூர் அண்ணா சாலையில்

வேலூர், ஏப். 26: வேலூரில் நீதிபதி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் தடுத்த போலீசாரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அண்ணாசாலையில் கலெக்டர் பங்களா எதிரே நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வாலிபர் ஒருவர் நீதிபதி குடியிருப்பு அருகே போதையில் வந்து, நீதிபதியை பார்க்கவேண்டும் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கற்களை எடுத்து போலீசாரை தாக்க முயன்றாராம். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை உள்ளே செல்லவிடாமல் போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், வேலூர் கன்சால்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த சிவசக்தி(26) என்பதும், இவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும், ஏற்கனவே இவர் இதேபோல் வேலூரில் போதையில் பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்டதாக வடக்கு, தெற்கு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப் படையை சேர்ந்த ேபாலீஸ்காரர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

The post நீதிபதி குடியிருப்புக்குள் செல்ல ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது தடுக்க வந்த போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு வேலூர் அண்ணா சாலையில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Anna Road ,Annasalai, Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...