உடுமலை, டிச. 13:உடுமலை, பல்லடம், திருப்பூர் ஆகிய மின் பகிர்மான வட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கேங்மேன் (பயிற்சி) பணிக்கு விண்ணப்பித்த 2016 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மற்றும் உடற்தகுதி தேர்வு உடுமலையில் நடந்து வருகிறது.கடந்த 11-ம் தேதி வரை கலந்துகொண்ட 48 பெண்களில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பிகாம் பட்டதாரி ரம்யா என்பவர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 48 பெண்களில் மின் கம்பத்தை முழுவதுமாக ஏறி தனது உடற்தகுதியை நிரூபித்ததை தொடர்ந்து அவருக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேற்கண்ட தகவலை உடுமலை மின் கோட்ட மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் தெரிவித்துள்ளார்.