×

திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

திருக்கோவிலூர், டிச. 4: திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாறு பாய்கிறது. இந்த ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு வழியாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்து பின்னர் கடலூர் மாவட்டத்திற்கு சென்றடைந்து கடைசியாக கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கடந்த இரண்டு வருடமாக போதிய மழை இல்லாத காரணத்தால் வறண்டு போனது. இதன் விளைவாக தென்பெண்ணையாற்றை ஒட்டிய பகுதிகளில் விவசாயம்  செழிக்காமல் பொய்த்து போனது.

மேலும் திருக்கோவிலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையானது. குறிப்பாக இப்பகுதி பொதுமக்கள்  விவசாயத்தில்  பெருத்த நஷ்டமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் தென்பெண்ணையாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் போர்வெல் அமைக்கப்பட்டு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பல மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருக்கோவிலூர் பகுதி மக்கள் ஆற்றில் தண்ணீர் வருவதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : coconut plantation ,Thirukkovilur ,
× RELATED முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட...