×

மயிலம் அருகே பரபரப்பு ஆற்றில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தை சடலம்

விக்கிரவாண்டி, டிச. 1: மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் தொண்டி ஆற்றில் மிதந்த பெண் குழந்தை சடலத்தை போலீசார் மீட்டனர். மயிலத்தை அடுத்த பாதிராப்புலியூர் தொண்டி ஆற்றில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த மயிலம் போலீஸ் மற்றும்  வருவாய் துறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த பாதிராப்புலியூர் விஏஒ அருள்செல்வி, கிராம உதவியாளர் செல்வம், மற்றும் மயிலம் போலீசார் ஆற்றில் மிதந்த பெண் குழந்தை சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : baby girl ,Parambara ,Peacock ,river ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு