×

சித்தோடு அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

பவானி, டிச. 1:  சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர், ஈபி காலனி, 2வது வீதியை சேர்ந்தவர் காதர் மகன் சையத் காதர் (53). இவர், பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் பெருந்துறைக்கு வேலைக்கு சென்று விட்டார். மனைவி மற்றும் மகன்கள் அருகாமையில் உள்ள மாமியார் வீட்டுக்கு, வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். வேலை முடிந்து நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் சென்று பார்க்கையில் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து, அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,jewelery ,Siddha ,house ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...