×

வாழப்பாடி, பேளூர் பகுதியில் சந்து கடைகளில்

மது விற்பனைவாழப்பாடி, நவ.29: வாழப்பாடி, பேளூர் பகுதியில் சந்து கடைகளில் மது விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்து 300 பாட்டிலுடன் ₹22000 ரொக்க பணத்தை கைப்பற்றினர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பேளூர் உள்ளிட்ட பிரதான கிராமங்களில் சந்து கடைகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டார். இதன்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். மேலும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில், வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் சந்து கடைகளில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாழப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்த அண்ணாதுரை(45), பேளூர் சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் சந்து கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்கள் மற்றும் ₹22,370 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ெதாடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Lounge stores ,Bellavadi ,Belur ,area ,
× RELATED ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்