×

வரும் 29ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 29ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 29ம் தேதி காலை 11 மணியளவில்,   விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை வகிக்கிறார். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Farmers' Grievances Meeting ,
× RELATED விவசாயிகள் குறை தீர் கூட்டம்