×

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

திங்கள்சந்தை, நவ.27: மண்டைக்காடு அருகே அழகன்பாறை காளிவிளையை சேர்ந்தவர் முத்துசாமி(65)கூலித் தொழிலாளி. இவரது தோட்டம் தலக்குளம் அருகே காஞ்சிரக்குழியில் உள்ளது. கடந்த 24ம்தேதி முத்துசாமி தோட்டத்தில் நின்ற பாக்கு மரத்தில் பாக்கு பறிக்க ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துசாமி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...