×

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தியாகதுருகம், நவ. 13: தியாகதுருகம் பேருந்துநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பது குறித்தும், இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்தும்தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து தியாகதுருகம் செயல் அலுவலர் அண்ணாதுரை (பொறுப்பு),  ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தை சுற்றி  ஆக்கிரமித்து இருந்த தள்ளு வண்டிகள், ஆட்டோக்கள், கோழி இறைச்சி கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். பேரூராட்சி  இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், துப்புரவு மேற்பார்வையாளர்  ரமேஷ், பேரூராட்சி ஊழியர்கள்   இப்பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags : evacuation ,bus stand ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு