×

ராகவேந்திர சுவாமிக்கு லட்ச தீப விழா

தர்மபுரி, நவ.13:  தர்மபுரி விருபாட்சிபுரம் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் லட்ச தீப விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10.30 மணிக்கு தாத்ரிஹவன ஹோமம், 11.30 மணிக்கு பவுர்ணமி சத்யநாராயண பூஜை, 12.30 மணிக்கு தீர்த்தப்பிரசாதம் நடந்தது. மாலை 6 மணிக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாண்டுரங்க விட்டலா பஜனை குழுவினர், பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, தீபங்களை ஏற்றி வழிபட்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கமிட்டி தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் சுபத்திரா சீனிவாசன், ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Laksha Deepa Festival ,Raghavendra Swamy ,
× RELATED தஞ்சாவூர் வடவாற்றங்கரையில் ராகவேந்திர சுவாமிகளின் 429ம் ஆண்டு ஜெயந்தி