×

டூவீலர்கள் மோதி வாலிபர் பரிதாப பலி

தேன்கனிக்கோட்டை, நவ.6: கெலமங்கலம் அருகே டூவீலர்கள் மோதியதில் வாலிபர் பலியானார். கெலமங்கலம் அருகே தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (35) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலைக்காக கெலமங்கலத்திருந்து அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது துளசி நகர் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, அவ்வழியே கெலமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த முனியப்பன்(27) என்பவர் டூவீலரில் எதிரே வந்துள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியது.

 இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து முனியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mourners ,
× RELATED இங்கிலாந்து ராணியின் இறுதிச்...