×

மாலமேடு சந்தையில் 20 டன் முருங்கை விற்பனை

தாராபுரம். நவ.1:தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் வேலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாலமேடு வாரச்சந்தையில் மூலனூர் வேலாம் பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பின்னர் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். கடந்த 15 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இந்த வாரச் சந்தையான நேற்று 20 டன் முருங்கைக்காய் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ மர முருங்கை ரூ 100க்கும், செடி முருங்கை ரூ 80க்கும் விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவாக இருந்ததால் விவசாயிகளுக்கு லாபம் அதிகம் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Malamedu ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்