×

தகராறின் போது தவறி விழுந்து முதியவர் சாவு

உளுந்தூர்பேட்டை,  நவ. 1: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன்கோயில் தெருவில்  வசித்து வருபவர் தில்லை. நேற்று முன்தினம் அவருடைய மனைவி கோமதி வீட்டில்  இருந்த போது ஆறுமுகம் மகன் சுந்தர்(35) என்பவர்  அங்கு வந்து இடப்பிரசனை  தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசிங்கமாக திட்டி கோமதியின் உறவினர் கோவிந்தன்(65)  என்பவரை கல்லால் தாக்க முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பி  கோவிந்தன் ஓடியபோது தவறி கீழே  விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த  கோவிந்தனை அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதில் அவர் உயிரிழந்து விட்டதாக  தெரிவித்ததை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் கோமதி கொடுத்த  புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரணை செய்து  வருகிறார்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...