×

மூலைக்கரைப்பட்டியில் விதி மீறி பட்டாசு வெடித்த மூவர் கைது

நாங்குநேரி. அக்.31: மூலைக்கரைப்பட்டியில் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்த மூவரை போலீசார் கைது செய்தனர். மூலைக்கரைபட்டி சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மூலைக்கரைப்பட்டி பஜாரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அங்கு  சிலர் தீபாவளியையொட்டி விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது போலீசார் பட்டாசு வெடிப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை காட்டி விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து பட்டாசு வெடிப்பதில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தாக பட்டபிள்ளை புதூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (20), சங்கர் (19), மூலைக்கரைப்பட்டி நேருநகர் துரைஅரசு (40), மாரிமுத்து (41) ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தப்பியோடிய சங்கரை தவிர மற்ற மூவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது