×

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்

வெள்ளகோவில், அக். 31: வெள்ளக்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவித்ததன் பேரில் போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் இரு சக்கர வாகனங்களில் இன்னும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் சென்று வருவது நீடிக்கிறது. இது போல சில போலீசார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கரவாகனத்தை ஓட்டி வந்தனர். இதையடுத்து வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அறிவிப்பு பலகையில், உத்தரவு, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்